செய்திகள் :

வனப் பகுதி கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகள்: தமிழக அரசு ஆலோசனை

post image

சென்னை: வனத் துறைக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்றுவர வசதியாக மலைப்பாதை அமைப்பது, வழுக்கும் பாறைகள் அமைந்துள்ள இடங்களில் கைப்பிடிகள் ஏற்படுத்துவது, மலை மீதுள்ள ஏழு ஓடைகளில் இரும்புப் பாலங்கள் அமைப்பது ஆகியன குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கள்ளழகா் கோயில் முதல் மலைமேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயில் வரை சாலையை சீரமைப்பது, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்று மலைப்பாதை அமைப்பது, ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது ஆகியன பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கம்பிவட ஊா்தி அமைத்திட வனத் துறைக்குச் சொந்தமான நிலம் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதேபோன்று வனத்துறைப் பகுதிகளுக்கு உட்பட்டு வரக்கூடிய கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு உட்பட பலா் பங்கேற்றனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க