செய்திகள் :

வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!

post image

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று வழியனுப்பு விழா நடைபெறுகிறது.

கடந்த 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டது மிக் 21 ரக போர் விமானங்கள். அந்த நாள் முதல், இதுவரை சுமார் 1,200 மிக் 21 பேர் விமானங்கள் நம் நாட்டைக் காக்கும் பணியை செய்து வந்தன.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக போர் விமானமாக வானத்தை வட்டமடித்து வந்த மிக் 21 ரக விமானங்கள் ஓய்வு பெறுகின்றன. இதன் மூலம், இன்று, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, இந்திய விமானப் படையிலிருந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

எப்படி நடக்கும் பிரியாவிடை

இந்த மிக் 21 ரக போர் விமானங்கள் ஆறு, இன்று பகல் 12.05 மணிக்கு விமானப் படை தளபதி மார்ஷல் ஏபி சிங் தலைமையிலான குழுவினரால் சண்டீகர் வான் பரப்பில் பறக்கவிடப்படும். அவை கடைசியாக தரையிறங்கும்போது, அவற்றின் மீது தண்ணீர் தெளித்து மரியாதை செலுத்தப்படும்.

சண்டீகரில் நடப்பது ஏன்?

1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படை தளத்தில் மிக் 21 ரக விமானங்கள் இணைக்கும் நிகழ்வானது இந்த சண்டீகரில்தான் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வானின் காவலன் என்ற அடையாளத்தோடு, விமானப் படையில் சேர்க்கப்பட்ட இந்த மிக் போர் விமானம், கார்கில் போர் முதல், கடைசியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் வரை நாட்டின் எல்லையைக் காக்க பணியாற்றி இருக்கிறது.

ரஷியாவில் உருவாக்கப்பட்டு இந்தியாவால் மேம்படுத்தப்பட்டவைததான், இந்த மிக் 21 ரக போர் விமானங்கள்.

வான் படையில் வலிமை மிக்க நாடாக இந்தியா மிளிர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிக்21 ரக போர் விமானம். இதற்கு இன்று பிரியாவிடை வழங்கப்படுகிறது.

கெடுபயனாக, அண்மைக் காலமாக ஏராளமான விபத்துகளை சந்தித்ததால் பறக்கும் சவப்பெட்டி என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

A send-off ceremony for the Indian Air Force's MiG-21 fighter jets is being held at the Chandigarh Air Force Base today.

இதையும் படிக்க... எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்! யாருக்கெல்லாம் நல்வாய்ப்பு?

மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக எ... மேலும் பார்க்க

லடாக்கில் 3வது நாளாகத் தொடரும் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லடாக்கின் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ல... மேலும் பார்க்க

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க