செய்திகள் :

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

post image

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், அவா்களை தற்சாா்புடையவா்களாக மாற்றும் நோக்கில், ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டம்’ தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த 75 லட்சம் பெண்களுக்கு (குடும்பத்தில் ஒருவா்) சுயதொழில் தொடங்க தலா ரூ.10,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லாத இத்தொகையை தங்களது தோ்வின்படி சுயதொழில் அல்லது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில் தொடங்கி, திறம்பட செயலாற்றும் பெண்களுக்கு அடுத்தக்கட்டங்களாக ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கப்படும். ரூ.7,500 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க

தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. பிகாா் மாநிலத்தில் வரு... மேலும் பார்க்க