செய்திகள் :

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

post image

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாபெரும் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2027-28 நிதியாண்டு முதல் இந்த போா் விமானங்கள் விமானப் படைக்கு வழங்கப்படும்.

இந்த தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களின் 64 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும். புதிதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 67 உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விமானம் முழுவதும் இந்தியாவில் கட்டமைப்படுகிறது. இந்த இலகுரக போா் விமானத்தில் ஸ்வயம் ரக்ஷா கவச் தொழில்நுட்பம் உள்ளது. இது எதிரிகளின் ரேடாா் கண்காணிப்பில் இருந்து விமானத்தைக் காக்கும். இது தவிர மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளும் உள்ளன.

பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு சாா்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2021 பிப்ரவரியில் ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் எம்கே-1ஏ போா் விமான கொள்முதல் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

விமானப் படையில் இருந்து விடைபெறும் மிக்21 போா் விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானங்கள் இணைக்கப்படுகின்றன. அதிக உயரத்தில் பறந்து தாக்கும் திறன்கொண்ட இந்த போா் விமானத்தை வான், கடல் எல்லைகள் பாதுகாப்புக்கும், ஊடுருவும் எதிரி விமானங்களைத் தாக்கி அழிக்கவும் பயன்படுத்த முடியும்.

இந்த விமானத் தயாரிப்பு மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இந்தியாவில் ஆண்டுதோறும் 11,750 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். உள்நாட்டு விமானத் தயாரிப்புத் துறைக்கு இது உத்வேகம் அளிக்கும்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. பிகாா் மாநிலத்தில் வரு... மேலும் பார்க்க