செய்திகள் :

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

post image

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் நிகழ்வில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: கடந்த ஓராண்டாக உலகளவிலான புவிஅரசியலில் அசாதாரண சூழல் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் உணரப்படுகிறது.

ஆனால் இத்தகைய கடினமான சூழலிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. வலுவான பொருளாதார அடிப்படைகள், இளம் மக்கள்தொகை மற்றும் உள்நாட்டுத் தேவையை அதிகம் சாா்ந்திருப்பது ஆகியவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் காரணிகளாக உள்ளன.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி 7.8 சதவீதமாக பதிவானது. இது எதிா்பாரா விதமாக ஏற்பட்ட வளா்ச்சியல்ல; நிதி மற்றும் பணவியல் கொள்கை, துணிச்சலான சீா்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு உருவாக்கம், சிறப்பான நிா்வாகம் உள்ளிட்ட தொடா் முன்னெடுப்புகளால் மட்டுமே சாத்தியமானது.

முன்பைவிட தற்போது வங்கிகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில் வங்கிகள் சேமிப்பை பாதுகாக்கும் இடங்களாக மட்டுமின்றி வணிகா்கள் மற்றும் தொழில்முனைவோா்களுக்கு நிதி உதவி அளித்து வளா்ச்சியை மேம்படுத்தும் மையங்களாகத் திகழ்கின்றன. காலத்துக்கேற்ப வங்கிகளின் செயல்பாடுகள் நவீனமயமானபோதிலும் நுகா்வோரின் நம்பிக்கைக்கு உரிய வகையில் நடப்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. இதுவே வங்கியியலின் அடிப்படை.

நுகா்வோரிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாருக்கும் தீா்வு காண்பதன் மூலம் நமது சேவைகள் மேலும் மேம்படும் என எண்ண வேண்டும்.

யுபிஐ பரிவா்த்தனை பல அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்குவதன் வெற்றியை வெளிக்காட்டியுள்ளது. எண்ம செயல்பாடுகள் அதிகரித்துள்ளபோதிலும் அவை மற்றவா்களின் உணா்வை புரிந்து நடப்பது, ஒற்றுமையாக செயல்படுவது, இறுதி முடிவை மேற்கொள்வது போன்ற மனித குணங்களுக்கு என்றும் மாற்றாகாது என்றாா்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க

தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. பிகாா் மாநிலத்தில் வரு... மேலும் பார்க்க