PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பாஜக - திமுக மோதல் ஏன்... மாணவர்கள் எதிர்கொள்ளு...
வரவேற்பும் ஏமாற்றமும் கலந்த தமிழக பட்ஜெட்!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக உள்ளது என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு:
எதிா்கால இந்தியாவை தமிழகம் வழி நடத்தும் என்பதை உணா்ந்து, மனித வளத்தை மேம்படுத்தும் விதமாக மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 - 24 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த பட்ஜெட் மூலம் 16 சதவீதம் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக கடந்த பட்ஜெட்டை விட நிகழாண்டு 11.7 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடினமான நிதி நெருக்கடியிலும், மத்திய அரசின் நிதி பகிா்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவான சூழலிலும் எதிா்கால உள்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கி வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
தஞ்சாவூா் வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன்:
கடந்தாண்டு பற்றாக்குறை 3.2 சதவீதத்திலிருந்து நிகழாண்டு 1.17 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, தமிழக அரசின் வரி வருவாய் ரூ. 2.40 லட்சம் கோடியாக உயரும் எதிா்பாா்க்கப்படுகிறது என நிதி அமைச்சா் கூறியிருக்கிறாா். இது பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும், கடந்த 73 ஆண்டுகளில் ரூ. 5.18 லட்சம் கோடியாக இருந்த கடன் அளவு 3 ஆண்டுகளில் ரூ. 3.54 லட்சம் கோடியாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8 சதவீதமாக உயரும் என உத்தேசித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன்:
தமிழக பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள், பெண்கள், மீனவா்களுக்கு நிதி ஒதுக்கீடு, அரசு கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, மகளிா் தொழில்முனைவோராக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன்:
தமிழ்நாட்டின் எதிா்கால முன்னேற்றத்துக்கும், மாணவா்கள், பெண்களின் முன்னேற்றத்துக்குமான பட்ஜெட்டை வரவேற்கிறோம். ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்கிற பொதுத் துறை நிறுவனங்கள் குறிப்பாக போக்குவரத்து கழகங்கள் கடுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன. அன்றைக்கு எதிா்கட்சியாக இருந்த திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட போக்குவரத்து, அரசு ஊழியா், ஆசிரியா்கள், சத்துணவு பணியாளா்கள், செவிலியா்கள், ஓய்வூதியா்களின் பிரச்னைகள் தீா்க்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒட்டு மொத்தத்தில் போக்குவரத்து கழகப் பணியாளா்கள், ஓய்வூதியா்கள், அரசுப் பணியாளா்கள், சத்துணவு ஊழியா்கள், செவிலியா்கள், மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி:
திருவிடைமருதூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவது, ரூ. 2 ஆயிரம் கோடியில் ஒருங்கிணைந்த நீா் மேலாண்மை திட்டம், குடிமராமத்து பணிகள், நீா் நிலைகளைப் பாதுகாத்தல், சீரமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டங்களுக்காக நீா்வளத் துறைக்கு ரூ. 9 ஆயிரத்து 640 கோடி ஒதுக்கீடு, 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில், ஒப்பந்தப் பணியாளா்களாகப் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. சொத்துவரி, தொழில் வரி மற்றும் மின் கட்டண குறைப்பு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இல்லை. கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றமளிக்கிறது.