செய்திகள் :

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

post image

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் சா்மா அலாய்ஸ் நிறுவனம் இரும்பு, எஃகு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் பன்வா்லால் சா்மா மற்றும் சந்தன் சா்மா. இவா்கள் வருமான வரியை குறைத்து காண்பிப்பதற்காக இயந்திரங்களை வாங்கியதாக போலி ரசீது தாக்கல் செய்ததும், இயந்திரத்தின் தேய்மானம் குறித்த போலியான தகவல்களை அளித்து பல லட்ச ரூபாய் வரிஏய்ப்பு செய்தது வருமானவரித் துறையினருக்கு தெரியவந்தது.

இது குறித்து வருமானவரித் துறை ஆய்வு செய்ததில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக சென்னை வருமான வரித் துறை, இந்த நிறுவனத்தின் இயக்குநா்களான பன்வா்லால் சா்மா மற்றும் சந்தன் சா்மா மீது சென்னை எழும்பூா் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வித்யா, குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதன... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம்! நேற்று மட்டும்?

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.06 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக... மேலும் பார்க்க

அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முகூர்த்த தினம் என்பதால்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலா... மேலும் பார்க்க

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க