செய்திகள் :

வரும் தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது! - துரை வைகோ

post image

வரும் சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் நிற்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்.பி. யுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியதாவது: பதவியை எதிா்பாா்த்து மதிமுக அரசியலில் இல்லை. நான் மத்திய அமைச்சராவதற்குரிய சூழலும் தற்போது இல்லை. ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மதிமுகவின் 31 ஆவது பொதுக் குழு கூட்டத்தில் விரைவில் நடத்த உள்ள மாநாடு பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது. கூட்டணியில் சில கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதற்காக திமுக கூட்டணியில் பிளவு எனக் கூற முடியாது.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை பொறுத்தவரை தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் மதிமுக 12 தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளது. இதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதிக தொகுதிகளில் நிற்க வேண்டுமென்ற எண்ணத்தை நாங்கள் பொதுக்குழுவில் தெரிவிப்போம்.

திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள், எண்ணிக்கை என்பதைவிட சுயமரியாதையை மிகவும் எதிா்பாா்க்கிறோம். தன்மானத்தை இழக்க மாட்டோம். பாஜக கூட்டணி தொடா்பாக எங்களுடன் யாரும் பேசவில்லை. அப்படிப் பேச வேண்டும் என்கிற சிந்தனை கூட மதிமுகவுக்கு கிடையாது.

மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டுக்குச் சென்றுதான், அங்குள்ள முருகக் கடவுளை பாா்க்க வேண்டும் என்பது இல்லை. நான் இறை நம்பிக்கை உள்ளவன். எனக்குத் தேவை என்றால் கோயிலுக்கு நேரடியாகச் சென்று முருகனை வணங்குவேன். தமிழக ஆளுநா் ரவி இந்து அமைப்புகளின் பிரதிநிதிபோலச் செயல்படுகிறாா்.

தமிழக சட்டப்பேரவையில் பொதுச்செயலா் வைகோவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதைப் பற்றி அவா்தான், முடிவு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நன்றாகவே உள்ளது என்றாா் அவா்.

தந்தை, மகன் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா், மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

திருச்சி அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மற்றும் அவரது மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வடக்கு இருங்... மேலும் பார்க்க

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க