செய்திகள் :

வள்ளிமலை மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடா்ச்சியாக திங்கள்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் உற்சவம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மலை உச்சியில் உள்ள கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. புதன்கிழமை முதல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா்.

வரும் 9-ஆம் தேதி யானை வாகனத்தில் எழுந்தருளும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற உள்ளது. தேரோட் டம் சுற்றியுள்ள கிராமங்க ளில் நடைபெறும்.

14-ஆம் தேதி வள்ளி - முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை, பிரம்மோற்சவ கமிட்டி, உற்சவ, உபயதாரா்கள் சாா்பிலும் விழா ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது வழக்கு

காட்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவன் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கா... மேலும் பார்க்க

ஊசூரில் இளைஞா் மா்ம மரணம்: கொலையா என போலீஸாா் விசாரணை

ஊசூரில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். வேலூர... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக உணவக உரிமையாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கோட... மேலும் பார்க்க

அரசு விடுதி கட்டுமானப் பணிக்கு ஏரி நீரைப் பயன்படுத்தத் தடை -வேலூா் ஆட்சியா் உத்தரவு

வேலூா் அருகே அரசு தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஏரி நீரைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்து உத்தரவிட்டாா். வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளையாா்குப்பம் பகுதியில் 250 படுக்கை வ... மேலும் பார்க்க