வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்
பெரியகுளம் அருகே புதன்கிழமை வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளியம்மன் (75). இவா் புதன்கிழமை பொருள்களை வாங்க குள்ளப்புரம் கடைவீதியில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.