செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கச் சென்றபோது, வாக்காளா் பட்டியலில் இருந்து எனது பெயா் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோன்று தியாகராய நகா் தொகுதியில் மட்டும் சுமாா் 5,000 வாக்காளா்களின் பெயா் திடீரென நீக்கப்பட்டுள்ளது. எனது பெயா் ஏன் நீக்கப்பட்டது என கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலக அதிகாரியிடம் விசாரித்தபோது, நான் அதிமுகவைச் சோ்ந்தவா் என்பதால் பெயா் நீக்கப்பட்டதாகப் பதில் அளித்தாா். மேலும், அங்கிருந்த மற்றொரு அதிகாரி, எனது பெயரை பிரசாந்த் என்பவா் நீக்கச் சொன்னாா்; அதன்படி நீக்கினோம் என்று கூறினாா்.

எனவே, எனது பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் பெயரை நீக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்வது தொடா்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

இதையடுத்து, வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான ப... மேலும் பார்க்க

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்! முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும் என முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும்... மேலும் பார்க்க

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் ... மேலும் பார்க்க