செய்திகள் :

வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள்: ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்! - ராகுல் காந்தி

post image

பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கேரளத்தில் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"வாக்குத் திருட்டு குறித்து இந்தியாவில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைப்பேன். அது யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும். அதன்மூலமாக வாக்குத் திருட்டுக்கு மேலும் ஆதாரங்களை வழங்குவேன்.

நாங்கள் சொல்வதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் கூறவில்லை. இதுவரை நடந்த பல விஷயங்களுக்கு எங்களிடம் 100% ஆதாரங்கள் உள்ளன. இவை விரைவில் வெளியே வரப் போகின்றன.

பிரதமரின் வாராணசி தொகுதியில் இதுபோன்று நடந்திருக்கிறதா என்று ஊடகங்களின் ஊகங்களுக்கு விடுகிறேன். நான் என்னுடைய வேலையைச் செய்கிறேன்.

வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்கள் ஹைட்ரஜன் குண்டுபோல வெடிக்கும்.

ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வருகிறது.

வாக்குத் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை சிஐடி கேட்டுள்ளது. ஆனால், கர்நாடக சிஐடி கேட்கும் தகவல்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழங்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் ஏன் வழங்க மறுக்கிறார்? அவர் மீது இதைவிட பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருக்க முடியாது" என்றார்.

Will soon reveal hydrogen bomb to prove vote theft by Modi, says Rahul Gandhi in Wayanad

இதையும் படிக்க | நான் பேசுவதே 3 நிமிடம்தான்.. மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வார்களா? - விஜய்

திரிம்பகேஷ்வரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

திரிம்பகேஷ்வரில் 3 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், திரிம்பகேஷ்வரில் கும்பமேளா தொடர்பான துறவிகளின் கூட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக ச... மேலும் பார்க்க

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் செப்டம்ப... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனி... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர... மேலும் பார்க்க

லத்தூரில் கனமழை: 40 மணி நேரத்திற்குப் பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்பு

லத்தூரில் பெய்த கனமழையின்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் சடலங்கள் 40 மணி நேர தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. மகாராஷ்டிராவின் லாத்தூர் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத மழையால் தத்தளித்து வருகிறது. இத... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள... மேலும் பார்க்க