செய்திகள் :

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

post image

எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசின் புதிய அறிவிப்பின்படி, எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வசிக்கும் வெலிநாட்டவர்கள், இந்திய நேரப்படி செப்டம்பர் 21, காலை 9.30 மணிக்குள் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்குப் பின் செல்பவர்களுக்கு புதிய நடைமுறைப்படி கூடுதல் கட்டண முறை அமலாகும்.

இதையடுத்து, முக்கியமான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே எச்-1பி விசாவில் மெரிக்கவில் பணியாற்றும் இந்தியர்கள், இப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு தாயகம் வந்திருப்பின், அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல நேரடி விமான சேவை இந்தியாவிலிருந்து அவசரமாக இல்லை. ஆகவே, அவர்கள் அனைவரும் மேற்கண்ட காலக்கெடுவுக்கு பின்னரே மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்வர்.

இந்த நிலையில், அந்த ஊழியர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டுமெனில் அவர்களை பணியமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் கட்டாயம் அதிக கட்டணம் செலுத்தியாக வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, புது தில்லியிலிருந்து நியூயார்க் செல்லும் விமான கட்டணம் சுமார் ரூ. 37,000 என்ற அளவிலிருந்து பன்மடங்கு உயர்ந்து, இப்போது ரூ. 70,000 - ரூ. 80,000 ஆக உள்ளது. டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த 2 மணி நேரத்துக்குள் இந்த கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், அமெரிக்காவிலிருந்து தாயகம் செல்ல விமான நிலையம் சென்றடைந்த பன்னாட்டு ஊழியர்கள் பலரும் டிரம்ப்பின் அறிவிப்பு குறித்த தகவல் வெளியானதும், இப்போது தங்கள் பயணத் திட்டத்தை உடனடியாக ரத்துச் செய்துவிட்டு அமெரிக்காவிலேயே ஐக்கியமாகியிருக்கும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்கவில் முக்கிய விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இதையும் படிக்க: எச்-1பி விசா கட்டண உயர்வு: பெரு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

H-1B holders in India saw a massive jump in the cost of a direct flight to the US

இதையும் படிக்க:நீங்கள் இந்த ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவரா? எச்-1பி விசா பெறுவதில் சிக்கல் அதிகம்!

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனி... மேலும் பார்க்க

லத்தூரில் கனமழை: 40 மணி நேரத்திற்குப் பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்பு

லத்தூரில் பெய்த கனமழையின்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் சடலங்கள் 40 மணி நேர தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. மகாராஷ்டிராவின் லாத்தூர் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத மழையால் தத்தளித்து வருகிறது. இத... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள்: ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்! - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள... மேலும் பார்க்க

வானில் பிரகாசமாக எழுந்த பிழம்பு! தில்லி-என்சிஆர் பகுதி மக்கள் ஆச்சரியம்!

தலைநகர் புது தில்லியின் பெரும்பாலான பகுதி மக்கள், சனிக்கிழமை அதிகாலையில், வானில் பிரகாசமாக எழுந்த பிழம்புகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்... மேலும் பார்க்க

வெளிநாட்டுச் சார்புதான் நம்முடைய எதிரி: பிரதமர் மோடி

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் எதிரி என்றும், தன்னம்பிக்கைதான் மருந்து என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்... மேலும் பார்க்க