செய்திகள் :

வெளிநாட்டுச் சார்புதான் நம்முடைய எதிரி: பிரதமர் மோடி

post image

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் எதிரி என்றும், தன்னம்பிக்கைதான் மருந்து என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

எனது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்தாண்டில் ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக, சந்தைகளில் அதிக வளர்ச்சி காணப்படும்.

பிரதமர் மோடி

இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு மருந்துதான். அது தன்னம்பிக்கைதான். வளர்ச்சிக்கு தன்னம்பிக்கைதான் மிக முக்கியம்.

உலகில் நமக்கு பெரிய எதிரி என்று யாரும் இல்லை. நமக்கு எதிரி இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப்பெரிய எதிரி. இதனைத்தான் நாம் தோற்கடிக்க வேண்டும்.

வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, நாட்டின் தோல்வியும் அவ்வளவு அதிகமாக இருக்கும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும்.

140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுச் செல்ல முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்திருப்பதை நாம் விட்டுவிட முடியாது. எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் ஆபத்தில் ஆழ்த்த முடியாது. நூறு துயரங்களுக்கு ஒரே மருந்து மட்டுமே உள்ளது, அதுதான் தன்னம்பிக்கை இந்தியா.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும், முழு வெற்றியையும் பெறவில்லை. நாட்டை உலக சந்தையிலிருந்து காங்கிரஸ் அரசு தனிமைப்படுத்தியது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோரிக்கணக்கான மதிப்புள்ள மோசடிகள் நடத்தப்பட்டன.

காங்கிரஸ் அரசின் கொள்கைகள், இளைஞர்களுக்கு பெரும் தீங்கினை விளைவித்தன. அவர்களின் கொள்கைகள், இந்தியாவின் உண்மையான வலிமையை வெளிப்படுவதைத் தடுத்தன என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

"This Is Our Biggest Enemy": PM On How India Will Move Forward

வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள்: ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்! - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள... மேலும் பார்க்க

வானில் பிரகாசமாக எழுந்த பிழம்பு! தில்லி-என்சிஆர் பகுதி மக்கள் ஆச்சரியம்!

தலைநகர் புது தில்லியின் பெரும்பாலான பகுதி மக்கள், சனிக்கிழமை அதிகாலையில், வானில் பிரகாசமாக எழுந்த பிழம்புகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்... மேலும் பார்க்க

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாத... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன... மேலும் பார்க்க