செய்திகள் :

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

post image

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதனை மேற்கோள்காட்டியே, ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.

எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் உயர்த்தி இன்று அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்காவின் எச்-1பி விசா பெற ரூ.90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு, இந்திய தகவல்தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு குறித்த செய்திய தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் ராகுல் காந்தி, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டுச் சார்புதான் நம்முடைய எதிரி: பிரதமர் மோடி

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் எதிரி என்றும், தன்னம்பிக்கைதான் மருந்து என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாத... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன... மேலும் பார்க்க

செல்வ அறிக்கை 2025! கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் 3வது மாநிலம் தமிழகம்!!

இந்திய நாட்டில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது நமது நாட்டில் வாழும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரம்.மெர்சிடிஸ்-பென்ஸ் ஹூரூன் இ... மேலும் பார்க்க

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க