செய்திகள் :

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

post image

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மாநாட்டில் பேசுவது குற்றமா? ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதும் நமது கடமையே.

மற்ற மீனவர்கள் என்றால், இந்திய மீனவர்கள் என்றும், தமிழகம் என்றால் தமிழக மீனவர்கள் என்றும் பேசுவதற்கு பாசிச பாஜக கிடையாது.

அலையாத்திக் காடுகள் அழிப்பு தடுக்கப்படுமா? சொந்தக் குடும்ப வளர்ச்சியே ஆட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாகை புது பேருந்து நிலையம் சுத்தமாக இருக்கிறதா?

உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வார இறுதியில் பிரசாரம் மேற்கொள்கிறோம்.

ஆனால், நம் மக்களைச் சந்திக்க எத்தனை நிபந்தனைகள்? அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது, இது பேசக்கூடாது என்று எத்தனை? நான் பேசுவதே வெறும்3 நிமிடம்தான்.

நம் பிரதமர் மோடியோ அமித் ஷாவோ வந்தால், இவ்வாறு நிபந்தனை போடுவீர்களா? மின்சாரத்தைத் துண்டிப்பீர்களா?

இதையெல்லாம்விட, பஸ் விட்டு வெளியில் வரக்கூடாது, கையசைக்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள்.

மிரட்டிப் பார்க்கிறீர்களா? உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும்?

மக்கள் நெருக்கடி இருக்கும் பகுதிகளில்தான் அனுமதி கொடுக்கிறீர்கள். எங்கள் போர் முழக்கம் உங்களைத் தூங்க விடாது.

என் மக்களைச் சந்திக்க ஏன் தடை? ஒரு சாதாரண ஆளாக, என் மக்களைச் சந்திக்கச் சென்றாலும் இப்படித்தான் நிபந்தனை போடுவீர்களா? அடக்குமுறை விளையாட்டு வேண்டாம்.

இனிமேல், இவ்வாறு நிபந்தனைத் தடையிட்டால், நான் மக்களிடமே அனுமதி கேட்பேன். பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து... பேசத் தொடங்கினார் விஜய்!

நான் பேசுவதே 3 நிமிடம்தான்.. மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வார்களா? - விஜய்

மக்கள் சந்திப்பு பயணத்துக்கு திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு ... மேலும் பார்க்க

சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், ம... மேலும் பார்க்க

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பி... மேலும் பார்க்க

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய்! சற்று நேரத்தில் பிரசாரம்

நாகை: தவெக தலைவர் விஜய், நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். காவிரி கடைமடைப் பகுதியில் விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற விருக்கிறார். விஜய் நாகையில் பிரசாரம் செய்ய காவல்துறை அன... மேலும் பார்க்க