செய்திகள் :

Modi: "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்;எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு..!" - பிரதமர் மோடி

post image

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல்தான் என்று பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் மோடி, "இன்று இந்தியா 'விஸ்வபந்து' உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகத்தில் நமக்கு பெரிய எதிரி யாரும் இல்லை. நம்முடைய மிகப் பெரிய எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல். இதுவே நம் மிகப் பெரிய எதிரி, இந்த எதிரியை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தோற்கடிக்க வேண்டும்.

பிரதமர் மோடி PM Modi

பிற நாட்டைச் சார்ந்து இருக்கும் இந்த சார்புநிலை என்ற எதிரியை நாம் எப்போதும் கனவாமாக கையாள வேண்டும். வெளிநாட்டுச் சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் தோல்வி இருக்கும்.

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு 'ஆத்மநிர்பர்' ஆக மாற வேண்டும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி நாட்டு மக்களின் எதிர்காலத்தை நாம் மற்றவர்களின் கைகளில் விட்டுவிட முடியாது. எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் பணயம் வைக்க முடியாது. நம் நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரே ஒரு மருந்துதான், அது தற்சார்பு இந்தியாதான்." என்று பேசியிருக்கிறார்.

India's enemy is dependence on other countries.

ஜிஎஸ்டி குறைப்பு - நாட்டின் வளர்ச்சி

மேலும், "இந்த ஆண்டு, ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சந்தைகள் அதிக வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``எல்லாவற்றையும் கூகுள், AI பார்த்துக்கொள்ளும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்'' - ஸ்டாலின் அறிவுரை

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள்.சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவ... மேலும் பார்க்க

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்' என்ற பெயரில் தொடங்கப்பட... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க

TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜ... மேலும் பார்க்க

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவண... மேலும் பார்க்க