செய்திகள் :

இந்தியாவுடன் சண்டை மூண்டால் சவூதி அரேபிய ராணுவம் நிச்சயம் களமிறங்கும்: பாக். அமைச்சர்

post image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதி அரேபியா ராணுவம் நிச்சயம் களமிறங்கும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம் கடந்த சில நாள்களுக்கு முன், கையொப்பமாகியுள்ளது. அதில் முக்கிய அம்சமாக, இரு நடுகளும் பாதுகாப்பு விவகாரத்தில் கூட்டாக இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெள்ளிக்கிழமை(செப். 19) ஊடகத்துக்கு அளித்துள்ளதொரு பேட்டியில் அவரிடம், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டால் அப்போது சவூதி அரேபியா களமிறங்குமா?” என்று வினவப்பட்டது.

இதற்கு அவர், “ஆம் நிச்சயமாக... அதில் சந்தேகத்திற்கிடமில்லை” என்றார். மேலும் அவர் பேசும்போது, “பாகிஸ்தானோ அல்லது சவூதி அரேபியாவோ எந்தவொரு பக்கத்திலிருந்து தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதல் நடவடிக்கையானது, இவ்விரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அதற்கு நாங்கள் இணைந்து பதிலடி கொடுப்போம்” என்றார்.

இவ்விரு நாடுகளுக்கு இடையில் கையொப்பமாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து அதன் செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் குறிப்பிடும்போது: “இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய மற்றும் உலக நிலைத்தன்மைக்கும் இந்த நெடுங்கால ஒப்பந்தத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதிலும் பரந்தளவில் அனைத்து பிரிவுகளிலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு கவனமுடன் செய்லாற்றி வருகிறது” என்றார்.

Pakistan's Defence Minister Khawaja Asif stated that under a new mutual defence pact with Saudi Arabia, both countries will provide military support if India or any other country launches an attack on either.

நீங்கள் இந்த ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவரா? எச்-1பி விசா பெறுவதில் சிக்கல் அதிகம்!

அமெரிக்காவில் வெளிநாடுகளிலிருந்துச் சென்று பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ள வி... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வு: ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிறுவனங்கள்!

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ... மேலும் பார்க்க

விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!

ஐரோப்பாவில் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை சனிக்கிழமை(செப். 20) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ப்ரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீட்த்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமா... மேலும் பார்க்க

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியு... மேலும் பார்க்க

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இதனால், இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கா... மேலும் பார்க்க