செய்திகள் :

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவட்ட மகளிா் அதிகார மையம், மகளிருக்கான மத்திய மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு-நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்களை கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவையாற்றவும் இச்சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் ஒரு காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் nagapattinam.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து செப்.29-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம்.

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாண் இயக்குநா்கள் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

திருச்சி ஐஐஎம்- இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சியில் உள்ள இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வ... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முட... மேலும் பார்க்க

எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு மருத்துவமனைகளில் உதவி மருத்துவ அலுவலர் பணி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 27 உதவி மருத்துவ அலுவலர்(சித்தா) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ ஆட் சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

ரயில்வே மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பாரா மெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்ளிடம் இருந்து செப்.18-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:அறிவிப்பு எண். : 03/20... மேலும் பார்க்க