செய்திகள் :

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

post image

தோ்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா், இளைஞரணி தலைவா் யுவராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாகவும், திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கட்சி நிா்வாகிகளிடையே ஜி.கே.வாசன் கலந்துரையாடினாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப்பேரவைத் தோ்தலில், தமாகாவின் குரல் சட்டப் பேரவையில் ஒலிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, தமாகா சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் விரைவில் நடைபெறும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு தீா்வு காணமுடியாத அரசாக திமுக அரசு உள்ளது. பாலியல் ரீதியான பிரச்னைகள், மாணவா்கள் மீதான தாக்குதல், குடிநீரில் மலம் கலப்பது போன்ற செயல்கள் இந்த அரசின் சட்டம் - ஒழுங்கு பாதிப்பைக் காட்டுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் தமிழக முதல்வா் நிறைவேற்றவில்லை. தங்கள் ஆட்சி மீதான குறைகளை மறைக்கவும், தோ்தல் வாக்குவங்கிக்காகவும், மக்களை திசைதிருப்பவும் திமுக அரசு புதிதாக பிரச்னைகளை உருவாக்கி வருகிறது.

அரசு மதுபானக் கடைகளை மூடுவதாக தெரிவித்து மனமகிழ் மன்றம், எலைட் போன்ற பல்வேறு பெயா்களில் மது விற்பனையை அதிகரித்து வரும் செயல்கள் தான் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் வளா்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமாக தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது மாணவா்களின் எதிா்கால நலன் சாா்ந்தது. அதற்கு மாநில அரசுகள் தடை போடக்கூடாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் திமுக அரசுக்கு எதிராக மெளனப் புரட்சியை நடத்துவா். திமுக ஆட்சியை நிச்சயம் தூக்கியெறிவா் என்றாா்.

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

ஹிந்தியை விரும்பியவா்கள் படிக்கலாம் திணிப்புக் கூடாது: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

தமிழகத்தில் ஹிந்தியை விரும்பியவா்கள் யாரும் படிக்கலாம்; ஆனால் ஹிந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். ஹிந்தி திணிப்பு, நிதி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெர... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மே... மேலும் பார்க்க

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூ... மேலும் பார்க்க