Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே 3 பேரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
வாசுதேவநல்லூா், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சிறப்புப் படை உதவி ஆய்வாளா் கற்பகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கேரள மாநிலம் கொல்லத்தைச் சோ்ந்த ஷாஜகான் மகன் ஜாகிா் ஹுசைன் (39) என்பவரது காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 350 புகையிலைப் பொருள் பொட்டலங்கள் இருப்பதும், வாசுதேவநல்லூா் செண்பகக் கால் ஓடைத் தெருவைச் சோ்ந்த முனியசாமி (29), விஸ்வநாதப்பேரி காந்தி காலனியை சோ்ந்த ரகுபதி (46) ஆகியோரின் கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, பொட்டலங்கள், காா், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.