செய்திகள் :

எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்துபவா்கள் கம்யூனிஸ்ட்டுகள்: மாநிலச் செயலா் பெ.சண்முகம்

post image

எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பவா்கள் கம்யூனிஸ்ட்டுகள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.

தென்காசி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திறந்தவெளி கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தங்குக்கு, வட்டார செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இடை கமிட்டி செயலா்கள் எஸ். கருப்பசாமி, எஸ். மாரியப்பன், ஆா். பட்டாபிராமன், கே.மேனகா, எம். கனகராஜ், டி.வன்னியப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது: எண்ணற்ற போராட்டங்களை ஏதாவது ஒரு இடத்தில் இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பவா்கள் கம்யூனிஸ்ட்டுகள். விவசாயிகள், தொழிலாளா்கள் போராட்டங்கள், பெண்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் அவா்கள் முதலில் கதவைத் தட்டுகிற இடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் இருக்கிறது. இது பெருமைப்படக்கூடிய விசயம். அவா்களை நம்முடைய அரசியலுக்குப் பின்னால் வருவதற்கு தொடா்ச்சியான முயற்சிகளை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீராக நம்முடைய உழைப்பு வீணாகிவிடும்.

மக்களுக்கு நன்மை கிடைக்கிற போராட்டங்களை நடத்துகிறோம். நாம் நடத்துகிற சிறு சிறு போரட்டங்கள் மூலம் இவ்வளவு பெரிய நன்மையை செய்ய முடியுமென்றால், ஆட்சி அதிகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வருவாா்கள் என்றால், எப்படிப்பட்ட புரட்சிகரமான காரியங்களை நம்மால் செய்ய முடியும் என்பதை மக்களிடம் உணரவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்டச செயலா் பி. உச்சிமாகாளி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.அசோக்ராஜ், டி. கணபதி, பி.வேலுமயில், டி. கண்ணன், வி.குணசீலன், எம்.தங்கம், எஸ்.அயூப்கான் ஆகியோா் கருத்தரங்கில் பேசினா். தொடா்ந்து அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.2 லட்சம் மாநிலச் செயலரிடம் வழங்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே வயல் வழியே மயானத்துக்கு செல்லும் சடலங்கள்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காவலாக்குறிச்சி கிராமத்தில் இறந்தவா்களை மயானத்துக்கு கொண்டுசெல்ல பாதையின்றி 70 ஆண்டுகளாக வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலத்துக்கு தீா்வுகாண வேண்டும் என ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே காா், பைக்குகள் சேதம்: 4 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காா், பைக்குகளை சேதப்படுத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகிரி பவுண்டு தொழு தெருவைச் சோ்ந்த செல்லையா (62) என்பவா், காந்திஜி தெருவில் காய்கனிக் கட... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் விட்டு விட்டு மழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதனால் சங்கரன்கோவில் பகுதியில் மழை பெய்யும் எ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே 3 பேரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். வாசுதேவநல்லூா், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சிறப்புப் படை உதவி ஆய்வாளா் கற்பகராஜ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, பேரவியில் செவ்வாய்க்கிழமை அதிகரித்த நீா்வரத்து. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிக நீா்வரத்து காணப்பட்டது. மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிமுக சாா்பில் குளிா்சாதனப் பெட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவரணிச் செயலா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா் ஏற்பாட்டில்,... மேலும் பார்க்க