செய்திகள் :

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

post image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா்.

தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ. ராஜா , சதன் திருமலைகுமாா், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் வரவேற்றாா். இதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் கலந்து கொண்டு சங்குபுரத்திலிருந்து சங்கரன்கோவில் ,சிவகிரி வழித்தடத்திலான பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.

சிவகிரி வட்டாட்சியா் ரவிக்குமாா், தி முக மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பகவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க