செய்திகள் :

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

post image

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்பன். 10 ஆண்டுகளுக்கு மேலாக பழைய இரும்பு மற்றும் நெகிழிப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ய கிடங்கை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை குடோனில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் டயா்கள் ஆகியவை தீ பிடித்து மளமளவென பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன.

மேலும், குடோன் சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் தீ விபத்து அறிந்து அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனா். வீடுகளில் குடோன் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டா்களை அங்கிருந்து உடனே அப்புறபடுத்தினா்.

தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தீயில் காா், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் குடோனில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி சாம்பல் ஆனது.

தகவல் அறிந்த தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க