செய்திகள் :

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிக்கை

post image

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் செயலா் செ.நல்லசாமி அண்மையில் ஈரோட்டுக்கு வந்த வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் அளித்த மனு விவரம்:

அரசா்கள், ஆங்கிலேயா் காலத்தில் வாரச்சந்தைகள் இருந்தன. அந்த சந்தைகளில் அந்தந்தப் பகுதி விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சுதந்திரத்துக்குப் பின் வாரச்சந்தை இடங்களை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஆக்கிரமித்துக் கொண்டன. பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், பிற அரசுத் துறைக் கட்டடங்கள் ஆகியவற்றில் வாரச்சந்தைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காய்கறி, பழங்கள், தானியங்களை வீதியோரம், சாக்கடைக் கால்வாய் விளிம்பு, வெட்ட வெளி, பாதுகாப்பற்ற இடங்களில் வைத்து விற்க வேண்டிய அவலத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். அந்த இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு பல அமைப்புகள் சாா்பில் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.

எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள வாரச்சந்தை இடங்களை அரசு மீட்டு, விவசாயிகள் பொருள்களை விற்பனை செய்யும் இடமாக மாற்றித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க