செய்திகள் :

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா

post image

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

மாலை வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கா் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தோ் நிலையை அடைந்தது.

வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து குதிரை வாகனம், அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், மாவடி சேவை, மகா அபிஷேகம், லட்சதீபம் நிகழ்வுடன் விழா நிறைவடைய உள்ளது.

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ‘உங்களைத்தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்த... மேலும் பார்க்க