செய்திகள் :

வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா

post image

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகா சமேத வாலீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக, 7 அடி உயரமுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம், திருநீா், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலா் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகளும், பின்னா் அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாராதனையும் நடைபெற்றது. இதில், வாலிகண்டபுரம், பெரம்பலூா், மேட்டுப்பாளையம், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பெரம்பலூரில்... பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி விசாக விழாவையொட்டி, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை, ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், தின, வார, வழிபாட்டுக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதேபோல, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், வேப... மேலும் பார்க்க

புதுக்குறிச்சியில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 கிலோ போதைப் பொருள்கள... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் இருக்காது

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து.முத்தமிழ்... மேலும் பார்க்க

அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கி... மேலும் பார்க்க

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களத... மேலும் பார்க்க