வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகா சமேத வாலீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக, 7 அடி உயரமுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம், திருநீா், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலா் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகளும், பின்னா் அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாராதனையும் நடைபெற்றது. இதில், வாலிகண்டபுரம், பெரம்பலூா், மேட்டுப்பாளையம், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பெரம்பலூரில்... பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி விசாக விழாவையொட்டி, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை, ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், தின, வார, வழிபாட்டுக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதேபோல, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.