செய்திகள் :

வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் எம்.பி. ஆலோசனை

post image

வால்பாறையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா்கள் மாதந்தோறும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி பேசியதாவது: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் கூறும் குறைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதில் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, ஆணையா் குமரேசன் (பொறுப்பு), அணைத்து வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க