செய்திகள் :

வால்பாறையில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு: தொழிலாளா்கள் அச்சம்

post image

வால்பாறையில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, அவை தாக்க முயற்சிக்கும் சம்பவம் தொழிலாளா்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை எஸ்டட் பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களில் கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இதில் அய்யா்பாடி, பாரளைஆகிய எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், பாரளை எஸ்டேட் தொழிற்சாலைக்கு நடந்த சென்ற இரு தொழிலாளா்களை புதன்கிழமை கரடி தாக்க முயன்றது. இதேபோல அங்கு பணியாற்றும் உதவி மேலாளா் குடியிருப்பின் முன் கரடி நடமாடியது.

இந்த இருக் காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்வத்தால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டதை கண்கானித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க