செய்திகள் :

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

post image

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.

தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இன்றைய கூட்டத் தொடர் நடவடிக்கையின்போது, பேசிய அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சநாதனம், அதனுள் இருக்கும் பழமே இறைவன். எவ்வாறு வாழைப்பழத் தோலை உரித்துவிட்டு பழத்தை சாப்பிடுகிறோமோ அதுபோலத்தான், சநாதனத்தை ஒதுக்கிவிட்டு இறைவனைக் காண முடியும் என்று தெரிவித்தார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய அதிமுக எம்எல்ஏ முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை தவறாக உள்ளது என்று கூறினார். சநாதனத்துக்கும் வாழைப்பழத் தோலுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும் வாழைப்பழமும் ஒன்று என்றால் இவ்வளவு பெரிய விவாதம், வழக்குகள் தேவையில்லை என்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பம் தகிக்கும்!

தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர... மேலும் பார்க்க

69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ராமதாஸ்

காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் தொடரும் குழப்பத்தை அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காவல்துறைக்கு 621 ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்க... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜம்மு-கா... மேலும் பார்க்க