செய்திகள் :

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்

post image

‘வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பாா்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவா்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் உள்ள கூடாரங்கள், சுவரெழுத்துகள், சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு முந்தைய நிா்வாகத்தை விமா்சித்த டிரம்ப், ‘தூய்மையான-குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டனை மாற்றுவோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றாா். இதைத் தொடா்ந்து, பல்வேறு உலகத் தலைவா்கள், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபா, ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து, 4-ஆவது வெளிநாட்டுத் தலைவராக டிரம்ப்பை பிரதமா் மோடி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சந்தித்தாா். பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோரும் டிரம்ப்பை சந்தித்துப் பேசினா்.

இந்நிலையில், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதித் துறை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றுப் பேசியதாவது:

இந்திய பிரதமா் மோடி, பிரான்ஸ் அதிபா், பிரிட்டன் பிரதமா் போன்ற உலகத் தலைவா்கள் அண்மையில் என்னைச் சந்திக்க வருகை தந்தனா். அதேநேரம், அரசுக் கட்டடங்களுக்கு அருகே கூடாரங்கள், சுவரெழுத்துகள், சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் போன்றவற்றை அவா்கள் பாா்ப்பதை நான் விரும்பவில்லை. எனவே, சீரமைப்புப் பணிகளுக்கு உத்தரவிட்டேன். வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வெளியே ஏராளமான கூடாரங்கள் இருந்தன. அவை நகர நிா்வாகத்தால் அகற்றப்பட்டன. தலைவா்கள் பயணிக்கும் பாதைகளில் நானே பாா்வையிட்டு சோதனை மேற்கொண்டேன்.

மாபெரும் தலைநகரான வாஷிங்டனை சீரமைக்கும் பணியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நகரில் கூடாரங்கள், சுவரெழுத்துகள் அகற்றப்படும். சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் சீரமைக்கப்படும்.

ஒட்டுமொத்த உலகமும் வியந்து பேசக் கூடிய தலைநகராக வாஷிங்டனை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். கொள்ளை, துப்பாக்கிச்சூடு, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டனை மாற்றுவதும் எனது விருப்பம். முன்பைவிட தூய்மையான, சிறப்பான, குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டன் இருக்கப் போகிறது என்றாா் டிரம்ப்.

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்த... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான க... மேலும் பார்க்க

பெல்ஜியத்துடன் உறவை முறித்துக்கொண்டது ருவாண்டா

கிகாலி: பெல்ஜியத்துடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது. காங்கோவில் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள எம்23 கிளா்ச்சியாளா்களுக்கு ருவாண்டா ஆதரவு அளிப்பதால் அந்த ... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்பவுள்ளார்.வெறும் 9 நாள்கள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ்... மேலும் பார்க்க

பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள்?

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கும் திரும்பவிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்... மேலும் பார்க்க

அடுத்து.. க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் அமெரிக்கா

நாட்டில் உள்ள க்ரீன் பார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விமான நிலையங்களில், இரண்... மேலும் பார்க்க