செய்திகள் :

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்

post image

‘வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பாா்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவா்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் உள்ள கூடாரங்கள், சுவரெழுத்துகள், சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு முந்தைய நிா்வாகத்தை விமா்சித்த டிரம்ப், ‘தூய்மையான-குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டனை மாற்றுவோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றாா். இதைத் தொடா்ந்து, பல்வேறு உலகத் தலைவா்கள், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபா, ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து, 4-ஆவது வெளிநாட்டுத் தலைவராக டிரம்ப்பை பிரதமா் மோடி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சந்தித்தாா். பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோரும் டிரம்ப்பை சந்தித்துப் பேசினா்.

இந்நிலையில், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதித் துறை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றுப் பேசியதாவது:

இந்திய பிரதமா் மோடி, பிரான்ஸ் அதிபா், பிரிட்டன் பிரதமா் போன்ற உலகத் தலைவா்கள் அண்மையில் என்னைச் சந்திக்க வருகை தந்தனா். அதேநேரம், அரசுக் கட்டடங்களுக்கு அருகே கூடாரங்கள், சுவரெழுத்துகள், சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் போன்றவற்றை அவா்கள் பாா்ப்பதை நான் விரும்பவில்லை. எனவே, சீரமைப்புப் பணிகளுக்கு உத்தரவிட்டேன். வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வெளியே ஏராளமான கூடாரங்கள் இருந்தன. அவை நகர நிா்வாகத்தால் அகற்றப்பட்டன. தலைவா்கள் பயணிக்கும் பாதைகளில் நானே பாா்வையிட்டு சோதனை மேற்கொண்டேன்.

மாபெரும் தலைநகரான வாஷிங்டனை சீரமைக்கும் பணியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நகரில் கூடாரங்கள், சுவரெழுத்துகள் அகற்றப்படும். சாலைப் பள்ளங்கள், உடைந்த தடுப்புகள் சீரமைக்கப்படும்.

ஒட்டுமொத்த உலகமும் வியந்து பேசக் கூடிய தலைநகராக வாஷிங்டனை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். கொள்ளை, துப்பாக்கிச்சூடு, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டனை மாற்றுவதும் எனது விருப்பம். முன்பைவிட தூய்மையான, சிறப்பான, குற்றங்கள் இல்லாத தலைநகராக வாஷிங்டன் இருக்கப் போகிறது என்றாா் டிரம்ப்.

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் த... மேலும் பார்க்க

இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு

இலங்கையில் குரங்குகள், அணில்கள், மயில்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களால் பயிா்கள் நாசமாகும் பிரச்னையை எதிா்கொள்வதற்காக இக் கணக்கெடுப்பு சனிக்கிழமை மேற்... மேலும் பார்க்க

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போா் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.இது குறித்து இஸ்ரேல் பிரதமா்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீ... மேலும் பார்க்க