செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

post image

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்பவுள்ளார்.

வெறும் 9 நாள்கள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் ஆகியோர், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நீண்ட முயற்சிகளுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது. இதன்மூலம் இன்றிரவு பூமிக்கு புறப்படும் சுனிதா வில்லியம்ஸ் நாளை மாலை வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் ஆகியோரின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க அரசின் பொது அட்டவணையில் மிக அதிக ஊதியம் பெறும் ’ஜிஎஸ்-15’ என்ற தரப் பணியாளர் ஆவார்.

ஜிஎஸ்-15 தரப் பணியாளர்களின் ஆண்டு ஊதியமானது, 125,133 அமெரிக்க டாலர்கள் - 162,672 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி, ரூ. 1.08 கோடி முதல் ரூ. 1.41 கோடியாகும்.

இதையும் படிக்க : பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள் ஏற்படும்?

இதனிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலகட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் குறித்து முன்னாள் விண்வெளி வீரர் கேடி கோல்மன் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு மிக குறைந்த அளவிலான சிறப்பு ஊதியமே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர், 2010-11 காலகட்டத்தில் விண்வெளியில் இருந்த 159 நாள்களுக்கு மொத்தமாக 636 டாலர்கள் மட்டுமே சிறப்பு ஊதியமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, நாளொன்றுக்கு 4 டாலர்கள்(ரூ. 347) சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல், 4 டாலர்கள் வழங்கப்படும் பட்சத்தில், சுனிதா மற்றும் பட்ச தங்கியிருந்த 287 நாள்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்.

இதன்படி, சுனிதா வில்லியம்ஸின் கடந்த 9 மாத சம்பளம் மட்டும் சிறப்பு ஊதியத்துடன் சேர்த்து, ரூ. 82 லட்சத்தில் இருந்து ரூ. 1.06 கோடி வரை ஊதியமாக பெறவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி திரும்பும் 4 வீரர்கள்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் ஆகியோருடன் டிராகன் விண்கலத்தில் மேலும் இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

மார்ச் 17ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்! நடக்க முடியுமா? வேறென்ன சிக்கல்கள்?

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கும் திரும்பவிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்... மேலும் பார்க்க

அடுத்து.. க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் அமெரிக்கா

நாட்டில் உள்ள க்ரீன் பார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விமான நிலையங்களில், இரண்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமி திரும்புகிறார்! நாசா நேரடி ஒளிபரப்பு!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி... மேலும் பார்க்க

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க