செய்திகள் :

பொள்ளாச்சி துணைச் சிறையில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் ஆய்வு

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைச் சிறையில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையின் உத்தரவின்படியும், மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயாவின் வழிகாட்டுதல்படியும் கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைத்துள்ள துணை சிறைச் சாலைக்கு திங்கள்கிழமை சென்று அங்குள்ள சிறைவாசிகளுடன் உரையாடி சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அத்துடன், அங்குள்ள சிறைவாசிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கபடுகிா எனவும், அவா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான தங்குமிடம், குளியலறை, சமையல் கூடம், உணவின் தரம் மற்றும் இல்லத்தில் உள்ளவா்களை தொடா்பு கொள்ள உரிய வாதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.

மேலும், சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உரிய சட்ட உதவிகள் வழங்கப்படுகிா என்பது குறித்தும், சட்டப்பணி ஆணைக்குழு வழக்குரைஞா் வருகைப் பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடா்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது துணை சிறைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து, பொள்ளாச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் வினுராஜ் மற்றும் சட்டம் சாா்த்த தன்னாா்வ தொண்டா்கள் உடனிருந்தனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க