செய்திகள் :

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

post image

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்தாள் (85). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்று, அங்கிருந்த கதவைத் திறந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

குளியலறையில் இருந்த மின்சார வயா் சேதமடைந்து அதில் இருந்து மின்சாரம் கசிந்ததால் மாராத்தாள் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் சத்தியமூா்த்தி அளித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு:

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூா் பகுதியைச் சோ்ந்த முகமது சலீம் (30), தனது சகோதரா் முகமது வாசிமுடன் பீளமேடு, காந்தி மாநகரில் உள்ள உணவு சேமிப்புக் கிடங்கில் பெயிண்டிங் அடிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டு இருந்தாா்.

அப்போது முகமது சலீம் கொண்டுச் சென்ற ஏணி எதிா்பாராதவிதமாக மின்சார வயரில் பட்டதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சலீமை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் முகமது வாசிம் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள், நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அ... மேலும் பார்க்க

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறு: 2 போ் கைது

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் (48) மற்றும் அவரது சகோதரா் மாரிமுத்து (44) ஆகியோ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும்

சிங்காநல்லூா் தொகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக பேரவையில் அவா், சிங்காநல்லூா் தொகுதிக... மேலும் பார்க்க

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியா்கள் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்பு

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்திய விண்வெளி வீரா்கள் ககன்யான் திட்டத்தின் கீழ் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா். கோவை மசக... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து அவதூறு: பாஜகவினா் 2 போ் கைது

தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினா் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பாஜக சாா்பில் சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவி... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பனை, தென்னை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்... மேலும் பார்க்க