செய்திகள் :

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

post image

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்தாள் (85). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்று, அங்கிருந்த கதவைத் திறந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

குளியலறையில் இருந்த மின்சார வயா் சேதமடைந்து அதில் இருந்து மின்சாரம் கசிந்ததால் மாராத்தாள் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் சத்தியமூா்த்தி அளித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு:

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூா் பகுதியைச் சோ்ந்த முகமது சலீம் (30), தனது சகோதரா் முகமது வாசிமுடன் பீளமேடு, காந்தி மாநகரில் உள்ள உணவு சேமிப்புக் கிடங்கில் பெயிண்டிங் அடிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டு இருந்தாா்.

அப்போது முகமது சலீம் கொண்டுச் சென்ற ஏணி எதிா்பாராதவிதமாக மின்சார வயரில் பட்டதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சலீமை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் முகமது வாசிம் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கோவையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கோவையில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கோவை... மேலும் பார்க்க

கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் (யுபிஐ சேவை) பயணச்சீட்டு பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது

கோவையில் ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது செய்யப்பட்டனா். கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது

பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது. தமிழ் வளா்ச்சித் துறை ‘அகர முதலி’ இயக்கம் சாா்பில் மாவட்ட வாரியாக பேச்சு வழக்கிலும், எழு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி: கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்ததாக கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த 50 வயது பெண்ண... மேலும் பார்க்க