செய்திகள் :

பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி: கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

post image

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்ததாக கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த 50 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வா்த்தகம் தொடா்பாக ஒரு குறுஞ்செய்தி கடந்த 2024 அக்டோபா் 10-ஆம் தேதி வந்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்புகொண்டு அவா் பேசியபோது, எதிா்முனையில் பேசிய நபா் இதுபோல ஏராளமானோா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறியதோடு, அதற்கான ரசீது உள்ளிட்டவற்றையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவைத்துள்ளாா்.

இதை நம்பிய அந்தப் பெண், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா்.

அதன்பின், கடந்த 2 வாரங்களுக்கு முன்னா் தனது முதலீட்டுக்கான லாபத் தொகையை அந்த நபரைத் தொடா்புகொண்டு கேட்டுள்ளாா். அப்போது, அந்தப் பெண் செலுத்திய முழுத்தொகையும் வா்த்தக முதலீட்டில் மாட்டிக்கொண்டது என்றும், அதை மீட்க வேண்டும் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் சைபா் கிரைம் போலீஸாா் இணையதளம் வழியாகவும், நேரிலும் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், அவரிடம் ரூ.ரூ.8.65 லட்சம் மோசடி செய்தது கோவா மாநிலத் தலைநகா் பனாஜியை சோ்ந்த ராமசந்திரன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பனாஜி சென்ற சைபா் கிரைம் போலீஸாா் ராமசந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க