செய்திகள் :

தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்திய தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

post image

திருப்பூரில் பிளஸ் 2 தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்திய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூா் அப்பாச்சி நகா் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளிக்கு தோ்வு அலுவலராக பணிக்கு வந்த ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தாமோதரன் (52) தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பொதுத் தோ்வு நடக்கும் அறைக்குள் மாணவா்களோ, ஆசிரியா்களோ கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்பது தோ்வு விதிமுறையாகும். ஆனால், தோ்வு நடக்கும் அறையில் இருந்த தலைமை ஆசிரியா் தாமோதரன் உத்தரவைப் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடந்த விசாரணையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தாமோதரன் வகுப்பறைக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்றதும், அதனை தோ்வறைக்குள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தாமோதரனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டது.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க