செய்திகள் :

விஜய்-க்கு எதிராக ‘ஃபத்வா’ அறிவித்த இஸ்லாமிய மதகுரு!

post image

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக இஸ்லாமிய சமயக் கட்டளை (ஃபத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி பரெயில்வி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு எதிராக ஃபத்வா (சமயக் கட்டளை) பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘நடிகர் விஜய் அரசியல் கட்சித் துவங்கிய பின் இஸ்லாமியர்களுடன் நல்லுறவு பேணி வருகிறார். ஆனால், அவரது திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தவறான கண்ணோட்டத்தில் காட்டப்பட்டனர். மேலும், சூதாட்டம் பயில்வோர் மற்றும் மது அருந்துபவர்களை அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், தமிழ் நாட்டின் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அனைவரும் விஜய்யின் மீது கோவத்திலுள்ளதாகவும், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இஸ்லாமியர்கள் யாரும் அவருக்கு ஆதரவளிக்கக் கூடாது என தான் ஃபத்வா அறிவிப்பதாகவும் மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க