விடுமுறையில் வந்த ராணுவ வீரா் விபத்தில் உயிரிழப்பு
காட்பாடி அருகே விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா்.
விருதம்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் ராஜாராம் (26). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியில் சோ்ந்து தற்போது டேராடூன் பகுதியில் பணியாற்றி வந்தாா். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், ராஜாராம் வெள்ளிக்கிழமை அதிகாலை வள்ளிமலை பகுதியில் இருந்து வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். காட்பாடியை அடுத்த விருதம்பட்டு பகுதியில் வந்தபோது சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவா் மீது மோதி ராஜாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.