செய்திகள் :

விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் உயிரிழப்பு

post image

கோவில்பட்டியில் விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் காந்தாரிமுத்து மகன் வேலுச்சாமி (66). கோவில்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் இரவுக் காவலராக பணியாற்றி வந்தாா். இவா், பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) காலை மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டாா். அய்யனேரி கிராமத்தில் உள்ள கண்மாய்க் கரை அருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் நின்றபோது மோட்டாா் சைக்கிள் திடீரென அவா் மீது விழுந்ததாம். இதில் காயமடைந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் தற்கொலை: சாத்தூா் அருகே சொக்கலிங்கபுரம் குண்டலகுத்தூா் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). இவரது மகள் பாண்டிச்செல்வி (32). இவருக்கும் வடக்குப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த முனியசாமி மகன் சுரேஷுக்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவா், புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க