செய்திகள் :

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

post image

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி அருகே சிக்கன் கடை நடத்தி வந்த இவா் கடந்த 16ஆம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். கீழப்பாண்டவா் மங்கலம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை குலைந்த சைக்கிள் கீழே விழுந்ததில் அவா் பாலத்தில் விழுந்து கழுத்தில் காயத்தோடு கிடந்தாராம்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க

பெண்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்களின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று, பண மோசடி செய்ததாக அந்த குழுவின் தலைவி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிம... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்: தமிழ்மகன் உசேன்

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன். உடன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வ... மேலும் பார்க்க