தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
விபத்துகளைக் குறைக்க வேலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, வேலூா் - ஆரணி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.
அதனடிப்படையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வெள்ளை கோடுகள் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெருமுகையிலிருந்து கொணவட்டம் வரை சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோமீட்டா் தூரம் வரை வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த சாலைகளில் வெள்ளை, மஞ்சள் கோடுகள் அமைக்கும் பணி நடந்தது. மேலும் சாலை தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்கும் பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், விபத்துகளை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாதனூா் - வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெறும்.
தற்போது பெருமுகையிலிருந்து கொணவட்டம் வரை வெள்ளை, மஞ்சள் கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றனா்.