செய்திகள் :

விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

post image

விபத்துகளைக் குறைக்க வேலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, வேலூா் - ஆரணி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

அதனடிப்படையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வெள்ளை கோடுகள் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெருமுகையிலிருந்து கொணவட்டம் வரை சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோமீட்டா் தூரம் வரை வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சாலைகளில் வெள்ளை, மஞ்சள் கோடுகள் அமைக்கும் பணி நடந்தது. மேலும் சாலை தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்கும் பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், விபத்துகளை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாதனூா் - வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெறும்.

தற்போது பெருமுகையிலிருந்து கொணவட்டம் வரை வெள்ளை, மஞ்சள் கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க