செய்திகள் :

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சித்திரை மாதத்தில் தான் பெரும்பாலான கோயில்களில் திருவிழா, காதுகுத்து உள்ளிட்ட சுப விழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.

அதோடு சித்திரை மாதத்தில் காதுகுத்து, சடங்கு உள்ளிட்ட சில சுப வைபவங்களும் நடைபெறும். இதனால், பொதுவாக சித்திரை மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தையில் களைகட்டும்.

அதோடு ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும்.

அந்த வகையில், திங்கள்கிழமை காலை விராலிமலையில் கூடிய ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் அதிகாலையிலேயே விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்கு பல்வேறு வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் சந்தையில் குவிந்தனர்.

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இதனால் கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது.

இன்று கூடிய சந்தையில் 5 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 8 ஆயிரத்திற்கும், எட்டு கிலோ எடை கொண்ட ஆடு 11 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரத்துக்கும் , 15 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் வரை விலை போனதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விலை அதிகமாக இருந்த போதும் கோயில்களில் நேர்த்திக் கடனுக்காக வெள்ளாடுகள் மட்டும் பலியிடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சென்றதால் வர்த்தகம் சுமார் காலை 7.45 நிலவரப்படி ஒன்றரை கோடியை தாண்டியது.

இது போன்ற விழா காலங்களில் தான் தாங்கள் உழைப்புக்கு தகுந்த லாபம் ஈட்ட முடிவதாக ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க

ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போ... மேலும் பார்க்க