செய்திகள் :

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

post image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் உதவி ஆணையர் கணேசனை கையும் களவுமாக பிடிக்கத் திட்டம் தீட்டினர்.

கணேசன்

அதன்படி நேற்று மாலை பணி முடிந்து கலால் வரித்துறை உதவி ஆணையர் கணேசன் காரில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திர ரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே உதவி ஆணையர் கணேசனின் காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழிமறித்தனர். தொடர்ந்து அவரிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இதற்கான ஆவணங்களை கேட்டபோது உதவி ஆணையாளர் கணேசன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதைதொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனியார் மது விற்பனைக்கூடங்களிலும் மெத்தனால் ஆய்வகங்களிலும் பணம் லஞ்சமாகப்பெற்றது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கலால்வரித்துறை உதவி ஆணையர் கணேசனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ள... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேல் சுற்றுலாப் பயணி; கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த இஸ்ரேல் பயணி உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விடுதி உரிமையாளர் கர்நாடக மாநிலம் கொப்பல் காவல் நி... மேலும் பார்க்க