செய்திகள் :

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

post image

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். கடந்த 5-ம் தேதி வழக்கம்போல, பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மதிய உணவு இடைவேளைக்காக தொழிலாளர்கள் அனைவரும் அறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 4 அறைகள் தரைமட்டமாயின. 6 அறைகள் தீக்கிரையாகின.

வீரலட்சுமி

இடிபாடுகளில் சிக்கி வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி (வயது 50) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி, வைத்தீஸ்வரி, கஸ்தூரி (31), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவூடையாபுரத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி மாணிக்கம் (54) மற்றும் மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார்‌ வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.

சைமன் டேனியல்

வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரலட்சுமி மற்றும் சைமன் டேனியல் ஆகியோர்‌ நேற்று உயிரிழந்தனர். இதனால் பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.‌

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: என்.ஹெச்சில் அடுத்தடுத்து விபத்து: வேடிக்கை பார்த்தவர் உட்பட 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அப்பகுதியில் உள்ள பட்டாசு கம்பேனி ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினரிடம் பணம் வாங்... மேலும் பார்க்க

கேரளாவை உலுக்கிய சாலை விபத்து - ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கிய குற்றவாளி

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில்கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பேபி என்ற மூதாட்டியும் அவரின் 9 வயது பேத்தி த்ரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே அதிவே... மேலும் பார்க்க

மும்பை: பன்றி என நினைத்துச் சுட்டதில் இருவர் பலி; மறைக்க முயன்ற மக்கள்; வசமாகச் சிக்கிய குற்றவாளிகள்

மும்பையின் மையப்பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மும்பையையொட்டி இருக்கும் பால்கர் மாவட்டத்திலும் அதிக அளவில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வ... மேலும் பார்க்க

குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது உறைபனி தாக்கம் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் பசுமை குறைந்து வறட்சி தொடங்கியிருக்கிறது. உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. காட்டுத்தீ ... மேலும் பார்க்க

விருதுநகர்: மூலப்பொருள் உராய்வால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பெண் தொழிலாளர்‌ பலி.. பலர் படுகாயம்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வி... மேலும் பார்க்க