செய்திகள் :

விலை வீழ்ச்சியால்‌ டன் கணக்கில் நீரோடையில் கொட்டப்படும் ஊட்டி கேரட்; பாதிப்பில் காட்டு மாடுகள்!

post image

மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மலை மாவட்டமான நீலகிரியில் கேரட் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் வீரிய ரக கேரட் விதைகளையே பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட்டை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். அறுவடை செய்த கேரட்டுகளை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கேரட் உண்ணும் காட்டு மாடு

கடந்த பல வாரங்களாக ஊட்டி கேரட் விலை வீழ்ச்சியடைந்தது வரும் நிலையில், முதல் ரக கேரட்டுகளை மட்டும் தரம் பிரித்து வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். டன் கணக்கான சுமார் ரக கேரட்டுகளை ஊட்டி அருகில் உள்ள கேத்தி பாலாடா நீரோடையில் கொட்டி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக கேரட்டை உண்ணும் காட்டு மாடுகள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து உள்ளூர் மக்கள், " கேரட் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பகுதியில் கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அதிகளவில் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கேரட்டுகளை தரம் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கேரட் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், முதல் ரக கேரட்டுகளை மட்டும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அடுத்த ரக கேரட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவை விட விற்பனையாகும் விலை குறைவு என்பதால் இழப்பைத் தடுக்க இங்கேயே விட்டுவிடுகின்றனர்.

கேரட் உண்ணும் காட்டு மாடு

டன் கணக்கில் குவியும் கேரட்டுகளை சுத்திகரிப்பு இயந்திர உரிமையாளர்கள் நீரோடையில் கொட்டி வருகின்றனர். இவற்றால் கவரப்பட்டு இந்த பகுதிக்கு வரும் காட்டு மாடுகள் அளவுக்கு அதிகமாக உண்ணும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், காட்டு‌ மாடுகள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

May Day: "பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்..." - உழைப்பாளர்கள் தின புகைப்படங்கள் | Photo Album

'மே தினம் 1' இந்தியாவுக்கே வழிகாட்டிய 'சிங்காரவேலர்' - 100 ஆண்டு பிளாஷ்பேக்! | Elangovan ExplainsJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்... மேலும் பார்க்க

உயிர்வேலி: முன்னொரு காலத்தில் அந்த வேலியில் எத்தனையெத்தனை உயிர்கள் வாழ்ந்தன தெரியுமா?

உயிர்வேலி. முந்தைய தலைமுறையினரிடம் இருந்த இயற்கை தொடர்பான அறிவை இன்றளவும் நமக்கெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பது. ஓர் உயிர்வேலியை எப்படி உருவாக்கினார்கள்; அதில் எத்தனையெத்தனை பதுங்கு உயிர்கள் வாழ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: கோடை மழை பெய்தும் நிரம்பாத முக்கடல் அணை; தற்போதைய நிலை என்ன? | Photo Album

முக்கடல் அணைகோடை விடுமுறை... ஜாலிக்கு ஜாலி, லாபத்துக்கு லாபம்... முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய பங்குகள்..!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/... மேலும் பார்க்க