நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை
வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் ஆறுகளின் கரைகளில் வனத்துறை தேக்கு மரங்களை வளா்க்கிறது. மழை, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் சாய்ந்து விளைநிலங்களில் விழும் தேக்கு மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவது இல்லை. வனத்துறைக்கு சொந்தமான மரங்களை விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்தக் கூடாது என்பதனால் விழுந்த மரங்கள் விவசாய பணிகளுக்கு இடையூறாக பல நாள்களாக அங்கேயே கிடக்கிறது.
இதனால் நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பணிகளின் போது மரம் விழுந்த பகுதியில் முழுமையான விவசாய ப்பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிபடுகின்றனா். எனவே, உடனடியாக விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.