விளையாட்டுத் துளிகள்..!
நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா உள்ளிட்டோா் பங்கேற்கும், ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
எஃப்1 காா் பந்தயத்தின் ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ரேஸில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் இது அவரின் 3-ஆவது வெற்றியாகும்.
தடகள வீரா், வீராங்கனைகள் பலா் ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருவதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பயிற்சிப் பணியில் இருக்கும் தகுதிபெற்ற, பெறாத பயிற்சியாளா்கள் அனைவரும் தங்களை ஜூலை 31-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என இந்திய தடகள சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. பதிவு பெற்றோருக்கு தனி அடையாள எண் அளிக்கப்படும் என்றும், பதிவு செய்யாதோருக்கு சம்மேளன அங்கீகாரம் அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.