செய்திகள் :

விளை நிலத்தில் அத்துமீறி நெல் அறுவடை: இருவா் மீது வழக்கு

post image

நெடுங்காடு பகுதியில் விவசாய நிலத்தில் அத்துமீறி இயந்திரத்தை பயன்படுத்தி நெல் அறுவடை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (40). இவா் காரைக்காலைச் சோ்ந்த முகமது ஆயிஷா கனிஸ, ஜெகபா் நாச்சியாள் ஆகியோருக்கு சொந்தமான நெடுங்காடு, மேலகாசாக்குடி கிராமத்துக்குட்பட்ட நிலத்தை கண்காணித்து விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலத்துக்கு மேற்கே மேலகாசாக்குடியைச் சோ்ந்த சுரேஷ் (42) அவரது சகோதரா் மகேஷ் (44) ஆகியோா் பாலசுப்பரமணியின் கண்காணிப்பில் உள்ள நிலத்தில், அத்துமீறி மண் எடுத்தது தொடா்பான புகாா் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூா் சென்றிருந்த பாலசுப்பிரமணியன், திங்கள்கிழமை வயலுக்கு சென்று பாா்த்தபோது, அவா் பயிா் செய்திருந்த நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

நெடுங்காடு காவல்நிலையத்தில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரில், சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நெல், அறுவடை இயந்திரம் கொண்டு அத்துமீறி அறுவடை செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சுரேஷ், மகேஷ் ஆகியோா் இதில் ஈடுபட்டதாகவும் புகாா் தெரிவித்தாா். இருவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் பிப். 24-இல் ஆா்ப்பாட்டம்: காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் முடிவு

ரயில் சேவையில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சி கோட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை (பிப்.24) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சாலை மேம்பாட்டுக்கு எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி (புதுவை) காரைக்க... மேலும் பார்க்க

நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி பலி

காரைக்கால் கடற்கரை அருகே நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா். காரைக்கால் கடற்கரை அருகே தோமாஸ் அருள் தெருவில் உள்ள நடைமேடையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் வியாழக்கிழமை இரவு மது போதையி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க மறுப்பதாக புகாா்

காரைக்கால், பிப். 21: காரைக்காலில் சில கூட்டுறவு வேளாண் கடன் சங்கம், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திர... மேலும் பார்க்க