செய்திகள் :

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய விடுதி உள்ளது. தற்போது விடுதியில் அறைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடிக்கத் தொடங்கியது. இந்த தீ வேகமாக மற்ற அறைகளுக்கும் பரவியது. மூன்றாவது தளத்துக்கும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீயணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செ... மேலும் பார்க்க

மனோஜ் உடல் தகனம்

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவ... மேலும் பார்க்க

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க