செய்திகள் :

விழுப்புரம்: `தமிழுக்கு முன்னுரிமை அளித்து பெயர் பலகை அமைக்க வேண்டும்'- ஆட்சியர் அதிரடி உத்தரவு!

post image

சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்திருப்பது மட்டுமன்றி ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் செஞ்சிக்கோட்டை, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், எமதண்டீஸ்வரர் ஆலயம், கல்மரப் பூங்கா ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக செஞ்சிக்கோட்டை மற்றும் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஆகியவற்றைப் பார்வையிட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கில் மக்கள் வருவது மட்டுமன்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். எனவே பல இடங்களில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. 

தமிழ் மொழி

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஓர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். ``விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருக்கும் பெயர் பலகைகள் வரும் மே 15-ம் தேதிக்குள் தமிழில் வைக்க வேண்டும். மேலும் பெயர் பலகையில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரை பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள், தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவில் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பெயர் பலகைகள் தமிழில் இல்லை என்றால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும். இதற்கென தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த உத்தரவு குறித்து தமிழக முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க